கொட்டிச் சிந்திக் காசைவிட்டு!......
கொட்டுகின்றோம் கொட்டுகின்றோம் கோடிகோடி யாகக்காசை
மட்டில்லாத மகிழ்வுஎய்தி மார்புதட்டி நமைவியந்தோம்!...
ராசராச சோழனுக்கு நேசமுள்ள 'பாட்டி"நாங்கள்
வரலாறு நம்பெயரை மறவாமல் போற்றிநிற்கும்!....
விண்ணுயர்ந்த கோபுரங்கள் பொன்னிழைத்த கலசங்கள்
மண்மிதிக்கக் காணாத 'மாமிள்"தரைமினுங்கும்
கண்கொள்ளாப் பொலிவுடனே விண்விழுங்கும் சொக்கட்டான்
எண்ணம்போல் மதிலெழுப்பி எல்லாமே எமதானோம்!....
ஒருகட்டை தாண்டிநீளும் ஒளிசுரக்கும் மின்விளக்கு
ஓடியோடி ஒளிசிந்தும் ஒய்யாரச் சரவிளக்கு
பாடிக் கதறிக்காதுப் பறையுடைக்கும் ஒலிபெருக்கி
பத்துக்கூட்டு மேளடியும் பறையோடு பொம்மலாட்டம்
கொட்டிச்சிந்திக் காசைவிட்டு கோ~;டியொன்று விடியும்வரை
மட்டில்லாத ஆசைதீர்க்க குட்டைச்சட்டை போட்டஆட்டம்
வகைதொகையாய் வெடிவாங்கி வானம் பிளக்கவிட்டோம்
வெடிபோட்டுக் கொத்தாக வீழ்ந்தகதை நாம்மறந்தோம்!....
எட்டுலட்சம் வெடிக்குஎன்று எழுப்பமாகப் பேசக்கேட்டும்
முட்டில்சாகா மூலமூர்த்தி ஒட்டிநின்றார் கருவறையில்!!...
Comments
Post a Comment